(படங்கள்) இளம் தாயும் குழந்தையும் சடலாமாக மீட்பு.


வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று காலை 11.00 மணியளவில்
ஒரு  தாயும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5வயதுடைய மகனுடன் தாயார் அயலவர் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுடைய மற்றைய மகன் அம்மாவைத் தேடி வந்துள்ளான்..

அதன் பின்னர்  அனைவரும் ஒன்று சேர்ந்து  5 வயதுடைய மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என  தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய தாயும், 5வயதுடைய குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர் , பண்டாரிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- தினஒலி-
(படங்கள்) இளம் தாயும் குழந்தையும் சடலாமாக மீட்பு. (படங்கள்)  இளம் தாயும் குழந்தையும் சடலாமாக மீட்பு. Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.