பொத்துவில் நகரமத்திய விடுதியில் போலீசார் சுற்றிவளைப்பு... விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நால்வர் கைது.


பொத்துவில்  நகரமத்தியில் அமைந்திருந்த விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிசார்
அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரும் கொக்கொட்டிச்சோலையைச் சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தாயொருவரும் விடுதி உரிமையாளர், மற்றும் உதவியாளரான பொத்துவில்வாசிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 3 0ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .



பொத்துவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெலிசரகேயின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக நீதிமன்ற முன்னனுமதியுடன் மேற்படி சுற்றிவளைப்பு   இடம்பெற்றுள்ளது.

நகரமத்தியில் பள்ளிவாசலுக்கு சமீபமாக குறித்தவிடுதி நீண்டகாலமாக சூட்சுமமானமுறையில் இயங்கி வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துவந்த நிலையில் பொத்துவில்  பிரதேச சபை தவிசாளர், உத்தியோகத்தரை விமர்சித்து கைதாகியுள்ள விடுதி உரிமையாளரும் பெண்ணொருவரும் அன்மையில் முகநூலில் கருத்துக்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- kaleefa nazit | கிராமத்தான் கலிபா -
பொத்துவில் நகரமத்திய விடுதியில் போலீசார் சுற்றிவளைப்பு... விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நால்வர் கைது. பொத்துவில்  நகரமத்திய விடுதியில்  போலீசார் சுற்றிவளைப்பு...  விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நால்வர் கைது. Reviewed by Madawala News on July 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.