பௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண், வைத்­தி­ய­சாலையில் போலீசாரால் கைது.. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.


பௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை வவு­னியா பொலிஸார்
கைது செய்து விடு­வித்­துள்­ளனர்.

குறித்த சம்­பவம் நேற்­று­ முன்­தினம் மாலை 3 மணி­ய­ளவில் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் இடம்பெற்­றது. குறித்த பெண் தனது தாய் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­ வ­ரு­வ­தனால் அதனை பார்­வை­யி­டு­வ­தற்­காக நேற்­று­ முன்­தினம் வைத்­தி­ய­சாலை சென்­றுள்ளார்.



இந்­நி­லையில் அவர் அணிந்­தி­ருந்த ஆடையில் விகா­ரையின் தோற்றம் கொண்ட உருவம் பதிக்­கப்­பட்­டி­ருந்­த­தனால் வைத்­தி­ய­சாலை பொலிஸார் அவரை அழைத்து விசா­ரித்­த­துடன்  வவு­னியா அவ­ச­ர ­பொ­லி­ஸா­ருக்கு தகவல் வழங்­கினர்.

சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை வாக­னத்தில் ஏற்றி அழைத்து சென்­றி­ருந்­தனர். தேக்­க­வத்­தை ­ப­கு­தியை சேர்ந்த 35 வயதுடைய குடும்­பப் பெண்ணே பொலி­ஸாரால் அழைத்­து­ செல்­ல­ப்பட்­டி­ருந்தார். இவர்  கடந்­த­ வா­ர­ம­ள­விலே இந்­தி­யாவில் இருந்து இலங்­கை ­வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்நிலையில் குறித்த பெண் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண், வைத்­தி­ய­சாலையில் போலீசாரால் கைது.. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. பௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண், வைத்­தி­ய­சாலையில்  போலீசாரால் கைது.. வழக்கும்  தாக்கல் செய்யப்பட்டது. Reviewed by Madawala News on July 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.