பௌத்த விகாரையின் உருவத்தை ஆடையில் பொறித்திருந்த பெண், வைத்தியசாலையில் போலீசாரால் கைது.. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
பௌத்த விகாரையின் உருவத்தை ஆடையில் பொறித்திருந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார்
கைது செய்து விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது. குறித்த பெண் தனது தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் அதனை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் வைத்தியசாலை சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஆடையில் விகாரையின் தோற்றம் கொண்ட உருவம் பதிக்கப்பட்டிருந்ததனால் வைத்தியசாலை பொலிஸார் அவரை அழைத்து விசாரித்ததுடன் வவுனியா அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றிருந்தனர். தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணே பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டிருந்தார். இவர் கடந்த வாரமளவிலே இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த பெண் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த விகாரையின் உருவத்தை ஆடையில் பொறித்திருந்த பெண், வைத்தியசாலையில் போலீசாரால் கைது.. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
Reviewed by Madawala News
on
July 18, 2018
Rating: