ஐ. ஏ. காதிர் கான்
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர்
முஸ்தபாவின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், ( 02 ) திங்கட்கிழமை முழு நாளும் வாழ்வாதார, சுயதொழில் முயற்சி மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான உதவிகள், வழங்கப்பட்டன.
முஸ்தபாவின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், ( 02 ) திங்கட்கிழமை முழு நாளும் வாழ்வாதார, சுயதொழில் முயற்சி மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான உதவிகள், வழங்கப்பட்டன.
பைஸர் முஸ்தபா சமூக நலன்புரி செயற்திட்டத்தின் கீழ், "எங்கள் பிள்ளைகள்" புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சிலும், இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு அவிசாவளையிலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வடக்கிலும், வறிய நிலையில் வாழும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தெஹிவளையிலும், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஜிந்துப்பிட்டியிலும் இடம்பெற்றன.
நிகழ்வுகளில் அமைச்சர் பைஸர் முஸ்தபா பங்குகொண்டு சிறப்பிப்பதையும், கலந்துகொண்ட அதிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் படங்களில் காணலாம்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் "எங்கள் பிள்ளைகள்"
Reviewed by Madawala News
on
July 06, 2018
Rating: