சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த வியாபாரி இருவரை இன்று (16) காலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மன்னார் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் டுபாயில் இருந்து பொருட்களை எடுத்து வரும் வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 7.30 மணியளவில் டுபாய் நாட்டிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 என்ற விமானத்தில் குறிப்பிட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதியூடாக செல்லும் போது பொருட்களை ஏற்றிச் செல்லும் தள்ளு வண்டியில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர்களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் எடை கொண்ட 29 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 2 கோடி தங்கத்துடன் கொழும்பு மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்தவர் சிக்கினர்.
Reviewed by Madawala News
on
July 16, 2018
Rating: