அக்கரைப்பற்றில் தாக்குதலுக்குள்ளானவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் ஹக்கீம்..



அக்கரைப்பற்று, ஆலையவடிவேம்பு பிரதேசத்தில் தனக்குச் சொந்தமான காணியை வேலியிடச்
சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (23) அவர்களது இல்லத்தில் சந்தித்தார்.

முறைப்படி சரியான ஆவணங்களுடன் காணியை கொள்வனவு செய்துள்ள நிலையில், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக இதன்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பொலிஸ் உயரதிகாரியுடன் தொலைபேசியில் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்தப் பிரச்சினையை சட்ட ரீதியாக அணுகுவது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்றில் தாக்குதலுக்குள்ளானவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் ஹக்கீம்.. அக்கரைப்பற்றில் தாக்குதலுக்குள்ளானவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் ஹக்கீம்.. Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.