சவுதி அரேபிய பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவுடன்
நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் 2020 ம் ஆண்டு சுமார் 3 மில்லியன் சவுதி அரேபிய பெண்கள் வாகனம் செலுத்துவர் என கணிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களும் வாகனங்களை செலுத்த ஆரம்பித்துள்ளதாக சவுதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் வீட்டு சாரதிகளாக பணியாற்றும் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் படிப்படியாக தங்கள் தொழில்களை இழப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
2020இல் 3 மில்லியன் சவுதி அரேபிய பெண்கள் வீதிக்கு வருவார்கள் ..
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: