பொதுஜன பெரமுனவுடன் இணைய 16 பேர் கொண்ட குழு தீர்மானம்



மஹிந்த ராஜபக்ஷ தலைமையை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்
இணைந்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

மாத்தளையில் மனச்சாட்சிக்கான சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

இரு பக்கத்தில் கால் வைத்துக் கொண்டு அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்க முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்க எதிர்ப்பு கூட்டணியொன்றை அமைப்பது எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். DC

பொதுஜன பெரமுனவுடன் இணைய 16 பேர் கொண்ட குழு தீர்மானம் பொதுஜன பெரமுனவுடன் இணைய 16 பேர் கொண்ட குழு தீர்மானம் Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.