14 வயது மாணவன் பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை.. சோக பின்னணி.


யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரியில் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி
கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே நேற்று (14) இரவு இவ்வாறு பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உரும்பிராயை சேர்ந்த இவர், கிளிநொச்சியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இம் மாணவனின் தாயார் இறந்த நிலையில் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தந்தையும் அவருடைய இரண்டாவது மனைவியும் இம் மாணவனை வேலணை மத்திய கல்லுரியின் விடுதியில் தங்க வைத்து கற்பிக்குமாறு, கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் கோரியுள்ளனர்.

இதனை அடுத்து சிறுவன் வேலணை மத்திய கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் விடுதியில் இருந்து தப்பிச் சென்று தனது உறவினர்களிடம் சென்றதாகவும் பின்னர் அவர்கள் மாணவனை மீள பாடசாலையில் விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே நேற்று இரவு குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயது மாணவன் பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை.. சோக பின்னணி. 14 வயது மாணவன் பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை.. சோக பின்னணி. Reviewed by Madawala News on June 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.