கண்டி கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் எவ்வித நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவில்லை. நானும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோருமே குறித்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்னின்று செயற்பட்டோம் என்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித் தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு நான் முன்னின்று செயற்பட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக அங்கு செல்வதற்கு முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைத் தொடர்புகொண்டு குறித்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்கு நான் முன்னின்று செயற்பட்ட விடயம் அவருக்குத் தெரியும் என்பதை எனது வாக்குமூலத்தில் குறிப்பிடுமாறும் அது குறித்து தேவைப்படுமிடத்து தன்னிடம் வாக்குமூலம் பெறுமாறு குறிப்பிடுமாறும் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகவே அவ்விடயத்தையும் எனது வாக்குமூலத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். கண்டி கலவரத்தை தடுப்பதற்கு நான் முன்னின்று செயற்பட்டமைக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் எனக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கும்போது கண்டி கலவரத்தை கட்டுப்படுத்த முடியாது போன அரசாங்கம் அதனை எம்மீது திணிப்பதற்கு முயற்சிக்கிறது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு எனது தொலைபேசியையும் பொறுப்பேற்றுள் ளது.
அந்த தொலைபேசியில் எனது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் உள்ளன. எனினும் எனது தொலைபேசியை ஆய்வு செய்வதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை என்பதால் அதனை நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளேன். ஏனெனில் நான் எவ்விதமான குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை.
கண்டி கலவரத்தை அரசாங்கத்தாலும் பொலிஸாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனாலேயே பிரச்சினை பரவியது. எனவே அரசாங்கம் சில தரப்பினரையும் கூட்டு எதிர்க்கட்சி வேறு சில தரப்பினரையும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. எனினும் அவ்வாறு குற்றம் சாட்டுவது முறையல்ல. மேலும் கண்டி கலவரம் இடம்பெற்றபோது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தில் அங் கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவில்லை.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் நானும் இணைந்தே கலவரத்தை கட்டுப்படுத்து வதற்கு முன்னின்று செயற்பட்டோம் என்று தெரிவித்தார்.
கண்டி கலவர விசாரணை விவகாரம்.. ரிஷாத், ஹக்கீமின் ஆதரவு எனக்குள்ளது.
Reviewed by Madawala News
on
May 18, 2018
Rating: