"நீங்க பேச்சு மட்டும்தான்.. செயலில் காட்டுங்கள். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் பதிவு.
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நேற்று ஆரம்பமாகியதையடுத்து அதில் ஜனாதிபதி
கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தி முடிந்ததும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் இடப்பட்ட பதிவு நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தி முடிந்ததும் ஜனாதிபதியின் ஊடக பிரிவு இயக்குகின்ற டுவிட்டர் தளம் இட்ட பதிவில் ""நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர். ஆனால் அந்த பேச்சுக்கள் செயல் வடிவம் பெறுவதை நீங்கள் உறுதிபடுத்தவேண்டும். அதனை செயலில் காட்டுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறு ஜனாதிபதியின் ஊடக பிரிவு இயக்குகின்ற டுவிட்டர் தளம் இட்ட பதிவு சற்று நேரத்தில் அகற்றப்பட்டது. எனினும் அதற்கிடையில் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் அது குறித்து கருத்துக்களை பகிர்ந்தனர்.
தொடர்ந்து டுவிட்டர் பதிவு ஒன்றை செய்த ஜனாதிபதியின் ஊடக பிரிவு தற்போது எமது டுவிட்டர் தளம் மீள இயங்க ஆரம்பித்துவிட்டது. இது தொடர்பில் தற்போது ஊடக பிரிவு விசாரணை நடத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"நீங்க பேச்சு மட்டும்தான்.. செயலில் காட்டுங்கள். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் பதிவு.
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: