தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும்



தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை
வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால் தெரிவித்தார். 

நாளைய தினம் நாட்டின் தென்மேற்குப் பாகத்தில் அடைமழை எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
கடந்த 6 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகாத காரணத்தால் நதிகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் மாலா அளவத்துகொட தெரிவித்தார்.

இயற்கை அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து மண்சரிவு அபாய அறிகுறிகள் தோன்றிய 211 ஸ்தானங்கள் இனங்காணப்பட்டுள்ள ன என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் விஞ்ஞானி கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிலித்தார்.
இவற்றில் 159 ஸ்தானங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் விஞ்ஞானி குறிப்பிட்டார்.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும் Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.