(அப்துல்சலாம் யாசீம் )
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மஹமார் பகுதியில் 03 அடி உயரமான மூன்று கஞ்சா செடிகளை
வளர்த்து வந்த வீட்டு உரிமையாளரை நேற்றிரவு (25) 11.30மணியளவில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
வீட்டுக்கு பின் புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அவ்வீட்டு வளவினை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது கஞ்சா செடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா மஹமார் குளத்தைச்ரே்ந்த கலந்தன் இஸ்ஸதீன் (23வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேச நபரை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கைது செயய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
3 அடி உயரமான மூன்று கஞ்சா செடிகளை வளர்த்த குற்றத்தில் இஸ்ஸதீனை கைது செய்த போலீசார்.
Reviewed by Madawala News
on
April 26, 2018
Rating: