பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்
குறித்து கலந்துரையாடுவதற்கு, ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணி இன்று (14) கொழும்பில் கூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் மாகாணசபை பதவி காலம் முடிவடையும் நிலையில், குறித்த மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை. கொழும்பில் மகிந்த தலைமையில் கூட்டு எதிரணி.
Reviewed by Madawala News
on
March 14, 2018
Rating: