ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை பெண் ரொசன்னாவை உலகின் 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது Times சஞ்சிகை
உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண் ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார்.
உலகப்புகழ்பெற்ற த டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் இவர் தெரிவாகியுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்ணாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் த டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது
அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த
தெரிவின் பின்னர் டைம்ஸ் சஞ்சிகை ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டுள்ளது
ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை பெண் ரொசன்னாவை உலகின் 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது Times சஞ்சிகை
Reviewed by Madawala News
on
April 23, 2024
Rating: