சோலார் மின்சார திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலரில் என்ன செய்ய போகிறோம் ; அமைச்சர் தெளிவு படுத்தினார்.
சோலார் மின்சார திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியானது பல அரசாங்க கட்டிடங்களில் மின் வசதி ஏற்படுத்த பயன்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி,
இந்திய அரசாங்க உதவியை பயன்படுத்தி சூரிய சக்தி மின்சாரம்
பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் மத ஸ்தாபனங்களுக்கு பொருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், CEB மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் தலைமையில் இன்று மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.
சோலார் மின்சார திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலரில் என்ன செய்ய போகிறோம் ; அமைச்சர் தெளிவு படுத்தினார்.
Reviewed by Madawala News
on
October 15, 2022
Rating: