இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்,
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (20) காலை கையளிக்கப்பட்டது.எம்.பி. லக்ஷ்மன் குமார காமி அவர்கள் கல்கமுவ, தம்புத்தேகம பகுதியில் இரண்டு ஏக்கரில் இந்த ஆப்பிள் செய்கையை மேற்கொண்டுள்ளார்.
ஆப்பிள் தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயியிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஆப்பிள் தோட்டத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆப்பிள் விதைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே இரண்டு ஏக்கர் வளமான பழங்கள் கிடைத்துள்ளதாகவும் லக்ஸ்மன் குமார காமி குறிப்பிட்டார்.
பச்சை ஆப்பிளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை சுவைக்க மறக்கவில்லை.
ஜனாதிபதியிடம் பச்சை ஆப்பில் கையளிப்பு.
Reviewed by Madawala News
on
October 20, 2022
Rating: