கல்கிஸ்ஸை - ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில், அதன் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 22,25 மற்றும் 29 வயதுடைய வதுராவ, கடுகஸ்தொட்ட மற்றும் வல்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
" ஆயுர்வேத நிலையம்" சுற்றி வளைப்பு... உரிமையாளர் உட்பட 3 இளவயது பெண்கள் கைது.
Reviewed by Madawala News
on
October 21, 2022
Rating: