மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவில் சம்பவம்.
(தகவல் :ஏறாவூர் நஸீர்)
சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த சித்தாண்டியை சேர்ந்த 77 வயதுடைய வயோதிபரே மரணமடைந்தவராவார்.
வழமையாக தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு காற்று வாங்கும் இவர், நேற்றைய (26/09) தினமும் மொட்டை மாடிக்கு செல்வதற்காக தடுப்பு சுவர் அற்ற மாடிப்படியினால் ஏறிச்செல்லும் போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்,
விழுந்த சத்தம் கேட்டு, சமையலறையிலிருந்த மனைவி ஓடி வந்த போது " தனது கணவரின் வாய், மூக்கு மற்றும் நெற்றியினால் இரத்தம் வழிந்தோடுவதை கண்டு, உடன் உறவினர்களுக்கு விடயத்தை தெரிவித்ததும் அவர்களது உதவியுடன் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.
சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின தகவலுக்கமைய, குறித்த இடத்துக்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் ,பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை இன்று (27/09) உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
பாதுகாப்பற்ற மாடிப்படியில் ஏறும் போது தவறி விழுந்ததால் ,விலா எழும்பு உடைந்து நுரைஈரல் சிதைவடைந்ததால் மரணம் சம்பவித்திருப்பதாக மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் தெரிவித்தார்.
ஏறாவூர் நஸீர்.
தடுப்பு சுவர் அற்ற மாடிப்படியில் தவறி விழுந்து மரணம்.
Reviewed by Madawala News
on
September 27, 2022
Rating: