தேசிய பௌதீக திட்டம் அமைச்சரவைக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் உள்ளடக்கப்படும் .
அபிவிருத்தித் திட்டங்களின்படி செயல்படுவதன் மூலம் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைக் குறைக்கலாம்
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தயாரிக்கப்படும் தேசிய பௌதீக திட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேவைகளின் அடிப்படையில் இந்த தேசிய பௌதீக தயாரிப்பிற்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள்.
எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் வினைத்திறனானதாகவும் மக்களின் தேவைகள் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாட்டின் அபிவிருத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், புகையிரத வீதி, போக்குவரத்து துறை போன்ற தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுப்பதன் மூலம் தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவு குறைக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை தேசிய பௌதீக திட்டத்தால் சரியாக திட்டமிடப்பட்டு செய்வதற்கு பேருதவியாக அமையும்.
எனவே, நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிரதீப் அனுரகுமார
(பிரசன்ன ரணதுங்க அமைச்சரின் ஊடக செயலாளர்)