இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம பௌத்த மதகுருவுக்கு 23ஆம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியல் .


பாறுக் ஷிஹான்

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம 

பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு   எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 23ஆம் திகதி வரை 07 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு  இன்று (16)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 


அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்   வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்  கைதான சந்தேக நபரை கடந்த  செப்டம்பர் மாதம் 16 ஆந் திகதி வரை  3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று(16) இவ்வழக்கு மீண்டும்  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள்  ஆராயப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கை இதுவரை  மன்றிற்கு கிடைக்கப்பெறாமை சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை  ஆகியவற்றை  கருத்திற் கொண்டு    சந்தேக நபரான தேரரின்  பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில்   மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


சம்பவத்தின் பின்னணி


அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த  3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு  கல்முனை ஆதார  வைத்தியசாலையில் கடந்த மாதம்(ஆகஸ்ட்) இறுதி பகுதியில்  இளம் பிக்குகளின்  பெற்றோரினால்   அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது  வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான  தனியான சிகிச்சை பிரிவிற்கு    3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக  மாற்றப்பட்டு  சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால்  பாலியல்  துஸ்பிரயோகத்திற்கு ஆளாகிதாக  குறிப்பிட்டிருந்தனர்.


இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு   குறிப்பிட்டிருந்தார்.


 இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில்  மருத்துவ அறிக்கை பிரகாரம்   செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில்  மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.


இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடந்த  செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டிருந்தது.


இதற்கமைய   3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட  பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில்  கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆந் திகதி       கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர்  அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் பௌத்த மதகுரு  செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.அத்துடன் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 



மேலும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட   இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே  வழங்கிய  முறைப்பாட்டிற்கமைய  அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த  விசேட பொலிஸார் இன்று கல்முனை பகுதியில் உள்ள  குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று  விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை  பொலிஸார் பெற்று கைது செய்திருந்தனர்.

 


மேலும்   பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான  சகோதரர்களான  08 , 13  , 14  வயது மதிக்கத்தக்க   3 இளம் பிக்குகளும் ஏற்கனவே   அம்பாறை  புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்  அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம பௌத்த மதகுருவுக்கு 23ஆம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியல் . இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம  பௌத்த மதகுருவுக்கு   23ஆம் திகதி வரை 7 நாட்கள்  விளக்கமறியல் . Reviewed by Madawala News on September 16, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.