திகன ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பல வருட காலமாக தேவையாக இருந்த சகல வசதிகளுடன் கூடிய ITC Computer Room கனனி அறை அபுதாலிப் சதகா நிருவனத்தினால் நேற்றைய தினம் 14-08-2022 ஞாயிற்றுக் கிழமை அபுதாலிப் சதகா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர். ரஸான் மற்றும் எம்.கே. சிராஜ் ஆகியோர்களினால் வெகு விமர்சயாக இவ் அறையை திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் மேற்படி சங்கத்தின் செயலாளரின் தனது உறையில் குடும்ப ஒற்றுமையின் மூலம் சதகா என்ற அடிப்படையில் உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை உள்ளடங்கியதாக இதற்கான முதலீடு செய்யப்பட்டதுடன், இன, மத பேதமின்றி தேவையானவர்களை இனம் கண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இயக்கமாக எமது இயக்கம் செயற்படுதவனை எடுத்துக் கூறினார். அத்துடன் இந்த கணனி அறையின் மூலம் மாணவர்கள் சிறந்த பலனை பெற்று அதன் மூலம் உறிய பயன் அடைந்தார்கள் என்ற செய்தி எம்மை வந்தடைந்தால் அதுவே எம் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பும் மேலும் இது போன்ற சேவைகள் செய்யகூடியதாக எம்மை ஊக்குவிக்கும்.
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பலைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கூட்டாக இனைந்து எமது அபு தாலிப் சதகா நிறுவனத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தனர்.
மேற்படி திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வளையக் கல்வி பனிப்பாளர், தெல்தெனிய திருமதி வை.எம். குமாரிஹாமி அவர்களும கௌரவ விருந்தினர்களாக மெததும்பர் பிரதேச சபை தலைவர் திரு. அசோக சமரகோன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சீ.எம். நசீம். எம்.எப்.எம். பாசில், தெல்தெனிய பொலிஸ் நிலைய பிரதான அதிகாரி திரு. எஸ்.ஜீ.ஏ.ஆர்.எல். சேனாதீர, திகன மின்சார சபை தலைவர் திரு. வசந்த குனசேகர, மஹவெலி அதிகார சபை திரு. எச்.எம். ஹேரத், ஹிஜ்ராபுர அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, அல்hஹாஜ் எம்.எச். எம் அனீஸ் அல்ஹாஜ் ரஸ்வி ஆர். ஹனீபா, அல்hஹாஜ் ஏ.எம். பர்ஹான், முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். இஹ்லாஸ் உற்பட பெற்றோர், பலைய மாணவர்கள் அபுதாலிப் சதகா நிறுவன உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தகவல்
அல்ஹாஜ் ஏ.எச்.எம், ஆரிப்
செயலாளர் - அபுதாலிப் சதகா நிறுவனம்
திகன ஹிஜ்ராபுர பாடசாலையில் கணனி அறை திறப்பு விழா : ITC Computer Room Opening Ceremony
Reviewed by Madawala News
on
August 15, 2022
Rating: