திருகோணமலை புல்மோட்டை பகுதியில் குடும்பத்
தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை-அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (20) குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் ஜனாசா தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்துல்சலாம் யாசீம்
குடும்பத் தகராறு.. மனைவியின் சகோதரர் தாக்கியதில் சதாம் உயிரிழப்பு. I
Reviewed by Madawala News
on
June 21, 2022
Rating: