குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டவர்களுக்கு
நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
'கோல்டன் பாரடைஸ் விசா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஆன்லைனில் விசா வழங்க முடியும்.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.
இந்த டெபாசிட் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருடத்திற்குப் பிறகு $50,000 திரும்பப் பெறலாம் ஆனால் மீதமுள்ள $50,000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக தொடர்புடைய கணக்கில் வைத்திருக்க வேண்டும் வேண்டும்.
டாலரை நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கத்தின் மற்றுமொரு திட்டம்.
Reviewed by Madawala News
on
June 01, 2022
Rating: