மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்...., தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் ; லிட்ரோ கேஸ் அறிவிப்பு.
சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாகவும்,
மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இதன்படி, நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்...., தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் ; லிட்ரோ கேஸ் அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
May 18, 2022
Rating: