அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது... இன்று முதல் நாடளாவிய ரீதியில் விநியோகம்.
இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு
நிலையங்களுக்கு பெற்றோல் 95 ஒக்டேன் விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
2 சரக்கு கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, 92 ஒக்டேன் பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் நாளை முதல் 95 பெற்றோலைப் பெறுமாறும் 95 ஒக்டேன் பெற்றோல் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது... இன்று முதல் நாடளாவிய ரீதியில் விநியோகம்.
Reviewed by Madawala News
on
May 23, 2022
Rating: