அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும்
உள்ளடக்கிய 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்டச் செயலர்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருளை வழங்க, புதிய பொறிமுறை மூலம் 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு.
Reviewed by Madawala News
on
May 18, 2022
Rating: