ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.ஐ.எம்.அஸ்ஹர்
சாய்ந்தமருது பிரதேச
செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு மற்றும் கலாசாரப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று (08) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்காவின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.ஐ.சபீனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள் சிலர் இங்கு கெளரவிக்கப்பட்டதுடன் மகளிர்களுக்கிடையிலான விவாதப்போட்டியொன்றும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆயிஷா சித்தீகா, சுகைல் அஸீஸ் மற்றும் கணக்காளர் நுஸ்ரத் பானு மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.நஸ்லா, கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர்,
கவிப்பேரரசி அனார் றிஹானா அஸீம் உட்பட பிரதேச செயலக மகளிர் உத்தியோகத்தர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தின நிகழ்வு #சாய்ந்தமருது
Reviewed by Madawala News
on
March 08, 2022
Rating: