சென்ற வாரம் அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த மற்றும் ஒரு சிறுவனும் உயிரிழப்பு.. ( மொத்த உயிரிழப்பு 6 ஆக உயர்வு)
ஜனாஸா அறிவித்தல்...
கடந்த ஞாயிற்றுக் கிழமை தமன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகண
விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட அவர்களுடைய இரண்டு புதல்வர்களும் கல்முனையைச் சேர்ந்த ஒரு சிறுவரும் மரணமடைந்ததை யாவரும் அறிவர்.சம்மாந்துறை மர்ஹும் ஜெஸீல் தம்பதியினரின் மற்றுமொரு புதல்வர் (9வயது) ஆபத்தான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வபாத்தாகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன். அழ்ழாஹ் அன்னவர்களை பொருந்திக் கொண்டு மேலான சுவனத்தை வழங்கிடுவாயாக.
மிகுந்த கவலையில் இருக்கும் அன்னவர்களது குடும்பத்தினர்க்கு மன வலிமையை வழங்குவாயாக.
சென்ற வாரம் அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த மற்றும் ஒரு சிறுவனும் உயிரிழப்பு.. ( மொத்த உயிரிழப்பு 6 ஆக உயர்வு)
Reviewed by Madawala News
on
January 21, 2022
Rating: