கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதியூடான போக்குவரத்து இன்று நண்பகல்
12 மணியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தொடர் மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி குறித்த வீதி மூடப்பட்டது.
ஸ்தல பரிசோதனையின் பின்னர் இந்த வீதியின் ஒரு பாதையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் , அவதானமாக பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடுகன்னாவ பகுதியூடான கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று நண்பகல் முதல் மீண்டும் திறக்கபட்டது.
Reviewed by Madawala News
on
November 17, 2021
Rating: