உர கொள்வனவில் 29 கோடி ரூபா ஊழலா? ஊடக செய்தியை அடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, விசாரணைக்கு உத்தரவு.
இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி
ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு “அருண” ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலர் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உர கொள்வனவில் 29 கோடி ரூபா ஊழலா? ஊடக செய்தியை அடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, விசாரணைக்கு உத்தரவு.
Reviewed by Madawala News
on
October 23, 2021
Rating: