ஆப்கானிய மக்கள் தம்மை தாமே பார்த்துக் கொள்வார்கள்... தலிபான்களின் ஆட்சி அம்மக்களுக்கு பிடிக்காவிட்டால் அவர்களே தலிபான்களை விரட்டியடிப்பார்கள் .
ஏ.பி.எம்.அஸ்ஹர்.
ஆப்காணிய மக்கள் தம்மை தாமே பார்த்துக்கொள்ள விடுங்கள். தலிபான்களின் ஆட்சி அம்மக்களுக்கு பிடிக்காவிட்டால்
அவர்களே தலிபான்களை விரட்டியடிப்பார்கள் என உலமாக்கட்சியின் தலைவர்மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி மேலும் கருத்துத்தெரிவிக்கையில்
தலிபான் பெண்களை ஒடுக்குபவர்களாக இருந்திருந்தால் அவர்களை பெற்ற தாய்மாரும், சகோதரிகளும் அவர்களுக்கு விசம் வைத்து கொன்றிருப்பர்.
பெண்களை அடக்கி வைக்கிறார்கள் என்றால் பெண்களுக்கு விலங்கு போட்டு வைத்துள்ளார்களா
12 வயதுக்கு மேல் பெண்கள் படிக்க தேவையில்லை என்றால் நிர்வாகத்துக்கு பெண்கள் தேவையில்லை என்பது அவர்கள் கருத்து... பெண்கள் இன்றி நிர்வாகம் நடத்த முடியாதா?
கிளின்டனுக்கு ஒரு மோனிக்கா போன்று அங்கும் வேண்டுமா
நமது நாட்டில் படித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட தொழில் இல்லை.
பெண் உழைப்பு இன்றி ஆண் குடும்பம் நடத்த முடியும் என அவர்கள் விரும்பினால் உங்களுக்கு ஏன் அந்தக்கவலை?
அவர்கள் தமது பெண்கள் விடயத்தில் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். ரஷ்யாகாரனும் அமெரிக்கனும் ஆப்கான் பெண்கள் பல்லாயிரம் பேரை கற்பழித்தது உங்களுக்கு தெரியாதா
ஏதோ அமெரிக்கப்படை ஏசு நாதரின் காக்கும் படை போன்று நமது பல முட்டாள்களின் நினைப்பு.
அமெரிக்க காரனே துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஓடும்போது நமக்கேன் ஆப்கான் பற்றி கவலை.
அந்த மக்கள் தம்மை தாமே பார்க்க விடுங்கள். தலிபான்களின் ஆட்சி அம்மக்களுக்கு பிடிக்காவிட்டால் அவர்களே தலிபான்களை விரட்டுவார்கள். பிடித்தால் அவர்கள் சந்தோசமாக வாழட்டும் விடுங்கள்.