பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வருகை
தருவது இடைநிறுத்தப்பட உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.மே 12 புதன்கிழமை இரவு 11.59 மணி முதல் இடைநீக்கம் நடைமுறைக்கு வருகிறது.
ட்ரான்சிட் விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு விமானங்கள் பாதிக்கப்படாது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று திங்கள்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஐக்கிய அரபு எமிரேட் மக்கள், இராஜதந்திர பணிகள், உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களின் ஜெட் விமானங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
இலங்கையர்கள் வருகை தருவதை இடைநிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
Reviewed by Madawala News
on
May 10, 2021
Rating: