கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பாதிக்க முடியும். என்றாலும்,
இதற்கு போதிய அறிவு அவசியமாகும். கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றியும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான அடிப்படைகள், நிறுவனங்களைத் தெரிவு செய்யும் முறைமை, மற்றும் பங்குப் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டு, ஓன்லைன் ஊடாக 20 மணித்தியாலங்களைக் கொண்ட ஒரு பாடத்திட்டம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 4 குழுவினர் இப்பாடத்தைப் பூர்த்தி செய்த நிலையில், ஐந்தாவது புதிய குழுவுக்கான பாடநெறி இம்மாதம் 10 ஆம் திகதி இன்ஷா அல்லாஹ் ஆரம்பிக்க உள்ளது. இதில் சாதாரண ஆங்கில அறிவு உள்ள எவரும் கற்றுப் பயனைடயலாம்.
இப்பாட நெறியில்,
வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய இலட்சியங்கள். அவற்றை அடைவதற்கான வழிமுறைகள்.
முதலீடு செய்தல், வியாபாரம் செய்தல், ஊழியராக இருத்தல் ஆகியவற்றில் உள்ள நன்மை தீமைகள்.
முதலீடு செய்வதன் சிறப்புக்கள் மற்றும் அதன் வழி முறைகள்.
கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றிய அறிமுகம்.
நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்கான வழிமுறைகள்.
Fundamental / Technical Analysis பற்றிய அறிமுகம்
பங்கு சந்தை, பொரக்ஸ் (Forex ), கிரிப்டோ கரன்ஸி (Crypto currency ) ஆகிய வற்றுக்குள்ளான வேறு பாடுகள்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்கள் போன்ற பல விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இப்பாட நெறியை பூர்த்தி செய்த பின்னர், தொடர்ந்தும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், வாழ்க்கையின்; அடிப்படைத் துறைகளான ஆன்மீகம், அறிவு, ஆரோக்கியம், உறவு முறை ஆகிய பகுதிகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் வாழக்கையில் முன்னேருவதற்கான வழிகாட்டல்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது பற்றிய மேலதிக விடயங்களை 94771122374 என்ற இலக்கத்துடன் WhatsApp ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
இப்படிக்கு
M. A. M. Haris Rashadhi (LLB (RE) LONDON, BIS (RE) (Malaysia) ESBM (OUSL))