ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு
குழுக்களை அமைக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.கிராமங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு சமூக முறைகேடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்படும்.
Reviewed by Madawala News
on
February 02, 2021
Rating: