திருடினார் என குற்றம் சுமத்தப்பட்ட 18 வயதான இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து
பொது மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த போது குறித்த இளைஞர் பேருந்து நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை கண்ட சிலர் பொது மக்கள் சட்டத்தை கையிலெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
VIDEO : பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர்!
Reviewed by Madawala News
on
January 14, 2021
Rating: