கரடியொன்றின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


 கரடியொன்றின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் படுகாயங்களுடன் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


நேற்று (25) மாலை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கரடியின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.


வயலில் வேலை செய்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே மேற்படி நபர் கரடித் தாக்கத்திற்கு உள்ளானதோடு அவரின் ஒரு கை மற்றும் காலில் பலத்த காயமேற்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதோடு முல்லைத்தீவு வனவிலங்கு அதிகாாிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்

கரடியொன்றின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.  கரடியொன்றின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. Reviewed by Madawala News on January 26, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.