ஜனாதிபதியின் "உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு ஓர் எதிர்காலம்" திட்டத்தில் முள்ளிப்பொத்தானை மற்றும் சிராஜ் நகர் பிரதேச மக்களுக்கு வீடுகள்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_
ஜனாதிபதியின் "உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு ஓர் எதிர்காலம்" எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின்
கீழ் முள்ளிப்பொத்தானை வடக்கு மற்றும் சிராஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தம்பலகம பிரதேச செயலார் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இன்று (19) இடம் பெற்றது.குறித்த அடிக்கல் நடும் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதியின் "உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு ஓர் எதிர்காலம்" திட்டத்தில் முள்ளிப்பொத்தானை மற்றும் சிராஜ் நகர் பிரதேச மக்களுக்கு வீடுகள்.
Reviewed by Madawala News
on
January 19, 2021
Rating: