கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதும் இலங்கைக்கு வழங்கப்படும்.

கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதும் இலங்கைக்கு அதனை வழங்குவதற்கு

நடவடிக்கையெடுக்கப் படுமென இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யுரி மெட்டரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யுரி மெட்டரிக்கும் இடையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரஷ்ய தூதுவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். கொவிட் 19 வைரஸூக்கான ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் ‘ஸ்புட்னிக்’தடுப்பூசி பரசீலனை மட்டத்தில் உள்ளது. 


இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டதும் பல நாடுகளுக்கு வழங்குவதற்கான ரஷ்யா உறுதியளித்துள்ளது. அதில் இலங்கையும் உள்ளடங்குமெனவும் ரஷ்ய தூதுவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். 


இதேவேளை, புதிய தகவல் தொழில்நுட்பத்துடன், கூடிய ஒன்லைன் கற்கை நெறிகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கான கோரிக்கையொன்றை ரஷ்ய தூதுவரிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்ததுடன், அதற்கு நடவடிக்கையெடுப்பதாக ரஷ்ய தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதும் இலங்கைக்கு வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதும் இலங்கைக்கு வழங்கப்படும். Reviewed by Madawala News on October 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.