இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ‘ஸ்பார்க் ஏர்’ பிப்ரவரி 2021 முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை மையமாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப் படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கார்கோ நடவடிக்கைகளுக்காக ஸ்பார்க் ஏர் ’ஆரம்பத்தில் இரண்டு ஏர்பஸ் ஏ 330 விமானங்களை இயக்கும்,
அதன் பின்னர் பயணிகள் நடவடிக்கைகளுக்கு விரிவடையும்.
என ஸ்பார்க் ஏர் லிமிடெட் தலைவர் கேப்டன் உதித தன்வத்த தெரிவித்தார்
இரண்டு ஏர்பஸ் ஏ 330 விமானங்கள் குத்தகை அடிப்படையில் எடுத்து இயக்கப்படும் என்றும் உள்ளூர் திறமைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் ஸ்பார்க் ஏர் லிமிடெட் அமைப்புகளின் தலைவர் கேப்டன் உதிதா தன்வத்தா மேலும் தெரிவித்தார்.
Spark Air.. இலங்கையின் புதிய சர்வதேச விமான சேவை ஆரம்பமாகிறது.
Reviewed by Madawala News
on
September 29, 2020
Rating: