சுயநலம் பாராமல் அனைவருக்கும் உதவி செய்யும் ஒரு அரசியல் தலைவர் உள்ளார் என்றால் அது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தவிர வேறு ஒருவர் இருக்க முடியாது என குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ குறிப்பிட்டார்.
இன்று கதுபொட பகுதியில் இடம்பெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
1993 ஆண்டு உயர்தரத்தில் சித்தி பெற்ற பின்னர் தான் தனது தந்தையின் சிபாரிசில் வாகன ஓட்டுநராக அமைச்சர் ஜோன்ஸ்டனிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறிய அவர் தன்னை தனது அரசியல் பயணத்தில் இணைத்து கொண்டு இன்று குருநாகல் மேயராக்கிய பெருமை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையே சாறும் என கூறினார்.
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை வழங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அமைச்சர் ஜோன்ஸ்டர் பெர்னாண்டோ போற்றப்பட கூடிய ஒருவர் எனவும் அவரின் கரங்களை அனைவரும் பலப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.