எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் போலியான பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம்



எம்.மனோசித்ரா

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படும் எந்தவொரு உறுப்பினருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது அதன் தலைமைத்துவத்துக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள நிலையில், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் போலியான பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களது அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிவித்தல் மூலம் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாவர். எனவே, நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் எந்தவொரு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் கிடையாது.


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தற்போது செயற்குழு தீர்மானங்களை எடுப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு ஏற்பவே செயற்படுகின்றமையால் எம்முடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அர்த்தமற்றது.சட்ட ரீதியாக இதனை நிரூபிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.


எம்முடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்காக தனிநபராக களமிறங்குவேன் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் போலியான பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் போலியான பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் Reviewed by Madawala News on June 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.