ஏப்ரல் 17 வரை தற்போது நிலவும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் நிலையான முடிவொன்றினை
 எடுக்க, தற்போது நிலவும் ஊரடங்கு
உள்ளிட்ட கட்டுப்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர வேண்டும் எனவும் அப்போதே கொரோனா பரவல் குறித்த தெளிவான முடிவொன்றுக்கு வர முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார். 


தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழல் மற்றும் முறைமையை அடிப்படையாக கொண்டு நோக்குமிடத்து தற்போதைய கால கட்டம் மிக முக்கியமானது எனவும் இதே கட்டுப்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந் நிலையில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட, பரவலுக்கான அதிக வாய்ப்புக்கள் உள்ள 12 பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தின் அரியாலை தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள், கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை போருத்தொட்டை, கொழும்பு மாவட்டத்தின் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ரத்மலானை அர்ஜுன மாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை கெகுனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதி, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - மாலிதுவ கொஹ_கொட பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

நேற்று முன்தினம் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அத்திட்டிய, ரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் கணிப்பீட்டின்படி ரத்மலானை ஸ்ரீ ஜனமக மாவத்தை முற்றாக முடக்கப்பட்டதாக இரத்மலானை மருத்துவ அதிகாரி ஜே.எம்.குணதிலக தெரிவித்தார்.

அத்துடன் வெல்லம்பிட்டிய, அத்திடிய பகுதிகளிலும் தேவையாவ பாதுகாப்பு வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிதாக முடக்கப்பட்ட பகுதிகளில் மாத்தறை மாவட்டத்தின் த, அக்குரஸ்ஸமாலிதுவ கொஹ_கொட 
பகுதியும் நேற்று இணைந்தது.

அப்பகுதியில், ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உள்ளான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது.

இன்றைய தினம் மாத்தறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் போதும், இந்த பகுதி தொடர்ந்து முடக்கத்திலேயே இருக்கும் என பொலிசார் கூறினர். அத்துடன் குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் இன்று தளர்த்தபப்டும் ஊரடங்கின் போது எவரும் உள், வெளிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முடக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் உள்ளடங்கும் மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்வதால் அங்கு சிக்கலில்லை என போலீசார் சுட்டிக்காட்டினர்.
ஏப்ரல் 17 வரை தற்போது நிலவும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும். ஏப்ரல் 17 வரை தற்போது நிலவும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும். Reviewed by Madawala News on April 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.