13,14 ஆம் திகதிகளில் அக்கரைப்பற்றில் நாட்டை அழகுபடுத்தும் வேலை திட்டம்.. அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு.
நாட்டை செழுமையாக்கும் திட்டம் முற்றிலும் கட்சி பேதங்கள் மறந்து மண்ணின் சொந்தக்காரர்
எனும் வகையில் ஆதரிப்பதோடு நின்று விடாமல் நாமும் களத்தில் இறங்கி வேலை செய்தாக வேண்டும் .
#இன்ஷா_அல்லாஹ்
எதிர்வரும் 13,14 ஆம் திகதி தொழில் நுட்ப கல்லூரி வட்டாரத்தை என் தலைமையில் முன்னின்று எங்கள் இளைஞர்களுடன் எங்கள் வட்டாரத் தலைவர் ,மற்றும் மாநகர சபை உறுப்பினர் மாநகர முதல்வர் அனுசரணையுடன் சூழலை அழகு படுத்த இருக்கிறோம்.
முதல் கட்டமாக முடிந்த அளவிலான வீதிகளில் காணப்படுகின்ற குப்பைகள் ,செடிகள், கற்கள் என்பவற்றை அகற்றுவது மட்டுமல்லாமல் முக்கியமாக வீதி சுவரொட்டிகளை அகற்றி அழகு படுத்த தீர்மானித்துள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வட்டாரங்களும் இதை முன் நின்று செய்வோம்.
வட்டாரங்கள் ஊடாக நாட்டை அழகுபடுத்தும் வேலை திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
Fairoos Al Sulaiman
13,14 ஆம் திகதிகளில் அக்கரைப்பற்றில் நாட்டை அழகுபடுத்தும் வேலை திட்டம்.. அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு.
Reviewed by Madawala News
on
December 03, 2019
Rating: