புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, இடம்பெற்றதாக
கூறப்படும் முறுகல் நிலை, தனிப்பட்ட ரீதியிலானது என்றும் தனக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் இன்று (08) தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்களான மனோ கணேசன், மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் கேட்டபோது அமைச்சர் ரிஷாட் பதியூதின் இதனை தெரிவித்ததுடன், தமது தரப்பினருக்கும் அமைச்சர் மனோவின் தரப்பினருக்கும் எந்தவித முறுகல் நிலையும் இல்லை என்று கூறினார்.
ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த முறுகல் இடம்பெற்றிருக்கலாம் என்றும், தான் அமைச்சர் மனோ உள்ளிட்டவர்களுடன் தொடர்ந்தும் சுமூகமாக பணியாற்றுவதாகவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை நோக்கியே அனைவரும் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெற்ற முறுகல் நிலை குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூதின் இன் விளக்கம்.
Reviewed by Madawala News
on
November 08, 2019
Rating: