சுகயீனமடைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூத்த அமைப்பாளர் மடவளை அல் ஹாஜ் எம். ஜ. எம்.சஹீத் அவர்களை சுகம் விசாரிக்க வந்த லொஹான் ரத்வத்த .
சுகயீனம் அடைந்துள்ள கண்டி மடவளையை சேர்ந்த ஸ்ரீ லங்கா
சுதந்திர கட்சி மூத்த அமைப்பாளர் அல் ஹாஜ் எம். ஜ. எம்.சஹீத் அவர்களை வீடு தேடிவந்து இன்று (22.10.2019) சுகம் விசாரித்தார் கௌரவ லொஹான் ரத்வத்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்.
அல்ஹாஜ் எம்.ஐ.எம். சஹீத் 89 வயது. காலஞ்சென்ற வத்துகாம தொகுதி,
பா உ ஏ.ஜீ .பெர்னான்டோ வின் நெருங்கிய நண்பராக இருந்த இவர் 1956 முதல் 1977 வரை வத்துகாம தொகுதி'மடவளை அமைப்பாளராக இருந்து பலசேவைகளை செய்துள்ளார் .
மடவலை மைதானம் ,மதீனா முதலாவது இரு மாடிகட்டிடம், மடவளை வரலாற்றில் அதிகமான அரச தொழில் வாய்ப்புக்கள்: ஆசிரியர்கள்,பாடசாலை ஊளியர்கள் மற்றும்
இ போ ச ஊளியர்கள் போன்ற அரச தொழில்களை பெற்றுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது.
அதேபோல்
1970 களில் அணி சேரா நாடுகளின் உச்சி மகாநாட்டுக்கு பின்னர் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்கா அவர்களை கௌரவிக்குமுகமாக மடவளையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1977 ம் ஆண்டு ஜுலை 22 ஆட்சி மாற்றத்தை அடுத்து நடைபெற்ற அசம்பாவிதங்களில் இவர் வீடு,வியாபார நிறுவனம் முற்றாக தாக்கி அழிக்கப் பட்டது குறிப்பிடப்பட்டது.
தொடர்ந்து அரசியல் பழிவாங்களுக்கு இவர் குடும்பம் உள்ளானதும் அறிந்ததே.
– அல் ஹாஜ் ரிஸ்மி –
சுகயீனமடைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூத்த அமைப்பாளர் மடவளை அல் ஹாஜ் எம். ஜ. எம்.சஹீத் அவர்களை சுகம் விசாரிக்க வந்த லொஹான் ரத்வத்த .
Reviewed by Madawala News
on
October 22, 2019
Rating: