ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைதான 64 பேருக்கும் விளக்கமறியல்



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமா அத்
 இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


இவர்கள் இன்று (12) மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 26 ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
மெட்ரோ
ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைதான 64 பேருக்கும் விளக்கமறியல் ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைதான 64 பேருக்கும் விளக்கமறியல் Reviewed by Madawala News on September 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.