பள்ளிவாசல் அருகில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுவரும் பல்லின தொழிலாளர்கள் இடையே மதுபோதை காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி, பள்ளிவாசலை சூழ பெரும் அச்சம் நிலவியது.
பின்னர் உடனடியாக அங்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு அமைதிநிலை தோற்றுவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மோதலில் இரு பொலிஸார் உட்பட 5 பேர் காயம் எனவும் ஒருவர் கைது செய்யப்பட்ட தாகவும் இன்று காலை தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த மோதலுக்கும் பள்ளிவாசலுக்கும் எவ்வித தொடர்புமில்லையென்றும், பள்ளிவாசலுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லையென்றும் பள்ளிவாசல் நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது.
நேற்றிரவு வெள்ளவத்தை முஹியத்தின் ஜும்மா பள்ளி அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவ அப்டேட் ...
Reviewed by Madawala News
on
August 05, 2019
Rating: