ஐக்கிய தேசிய கட்சியினுள் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வண்ணம் சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்ய ஆதரவு வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும், பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி ஒருமனதாக முடிவு செய்து தன்னை பொது வேட்பாளராக நியமிப்பதாயின் தான் போட்டியிடத் தயார் எனக் கரு ஜயசூரிய ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.