ரிசாத் பதியுத்தீன் அமைச்சு பொறுப்பேற்றமைக்கு ரதன தேரர் பொறுப்பு கூறவேண்டும்
என மாகல் கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா பிரேரரணையில் தோல்வியுற்று வீடு செல்ல வேண்டி இருந்த ரிஷாத் பதியுத்தீனை உண்ணா விரதம் இருந்து அவரது குப்பைகளை கழுவி மீண்டும் அமைச்சு பதவி ஏற்க தேவையான களத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
குண்டு தயாரித்த செப்பு தொழிற்சாலைக்கு செப்பு வழங்கியது நாங்களா ? இவற்றை ஒரு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க முடியுமா ? ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுகளுக்கு தீர்மான முடியுமா ? இவை அனைத்தும் பச்சை பொய் !
மக்களை திசை திருப்பி அமைச்சை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரிசாத் பதியுத்தீன் அமைச்சு பொறுப்பேற்றமைக்கு ரதன தேரர் பொறுப்பு கூறவேண்டும் ..
Reviewed by Madawala News
on
July 30, 2019
Rating: